பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபகாலமாக தான் எந்த மேடையில் ஏறினாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி போட்டுத்தாக்கி விட்டுத்தான் இறங்குகிறார் டி.ராஜேந்தர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த கல்கண்டு படத்தின் ஆடியோ விழாவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடியன்களை செம தாக்கு தாக்கினார்.
அவர் பேசும்போது, இன்றைக்கு ஆரம்பத்தில் பூனை மாதிரி வரும் நடிகர்கள் ஓரிரு படங்கள் ஹிட்டடித்ததும் புலியாக மாறி விடுகிறார்கள். ஒரு நாள் கால்சீட்டாக ஆயிரம், இரண்டாயிரம் என்று வாஙகியவர்கள் லட்சங்களை தாண்டி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். நான் அறிமுகம் செய்த ஒரு காமெடி நடிகர்கூட வெறும் 1500 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் என் படத்தில் நடித்தார். ஆனால் இப்போது அவர் சம்பளம் கோடிக்கணக்கில் என்கிறார்கள்.
முன்பெல்லாம் காமெடி நடிகர்கள் நியாயமாக சம்பளம் வாங்கினார்கள். அவர்களெல்லாம் ரசிகர்களை மட்டுமின்றி தயாரிப்பாளர்களையும் சிரிக்க வைத்தனர். ஆனால், இன்றைய சிரிப்பு நடிகர்களோ, ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், கோடி கோடியாக சம்பளம் தரும் தயாரிப்பாளர்களை அழ வைக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? என தானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் பேசினார்.