‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
32 வயதாகும் அனுஷ்கா தற்போதும் பிசிதான். 4 மெகா படங்களில் இரவு பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது அவரது முகத்தில் முதிர்ச்சி தென்படுகிறதாம். குறிப்பாக, சரியான தூக்கம் இன்றி நடித்தால் மறுநாள் மேக்கப் போட்டாலும் முகம் பளிச்சிடுவதில்லையாம். அதனால் அவர் நடிக்கும் காட்சிகளில் க்ளோசப் ஷாட் வைக்கவே கேமராமேன்கள் அஞ்சுகிறார்களாம்.
தெலுங்கில் அவர் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களில் சரித்திர கதாபாத்திரம் என்பதால் மெச்சூரிட்டியான முகம் தேவைப்பட்டதால் முதிர்ச்சியைப்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். ஆனால், கெளதம்மேனன் படத்தில் நடித்தபோது பழைய கிளாமர் முகத்தில் இல்லையே என்று கேமராமேனின் காது கடித்தாராம் கெளதம்.
அதையடுத்து, இந்த விசயத்தை முகத்தில் அடித்தார் போல் சொன்னால் பீல் பண்ணி விடுவார் என்பதற்காக, சமயம் பார்த்து அனுஷ்காவிடம் நாசுக்காக சொல்லி புரிய வைத்தார்களாம். அவர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்ட அனுஷ்கா, இப்போது தனது முகத்தில் இளமையை கொண்டு வரும் யோகா பயிற்சிகளில் அதிகமாக ஈடுபடுகிறாராம். அதோடு, படப்பிடிப்புக்காக அவரை அழைத்து வந்தாலும், அவருக்கு நல்ல ஓய்வு கொடுத்த பின்னரே கேமரா கண்களுக்கு முன்பு அனுஷ்காவை அழைத்து வருகிறாராம் கெளதம்மேனன்.