தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்கு பிறகு வி.சி.வடிவுடையான் சொந்தமாக தயாரித்து இயக்கும் படம் கன்னியும் காளையும் செம காதல். கரணின் 75வது படம். திருப்தா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தருண்கோபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜமீன்கள் அதிகம். ஒரு காலத்தில் குறுநில மன்னர்போல வாழ்ந்த பல குடும்பங்கள் இப்போது வறுமையில் வாடுகிறது. ஆனாலும் தான் ஜமீன் பரம்பரை என்கிற கர்வம் அவர்களுக்கு இருக்கும். இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். கரன் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இன்றைய இளைஞர். எல்லாத்தையும் இழந்தபோதும் ஜமீன் கர்வத்தோடு வாழ்கிறவர். அவர் பண்ணுகிற அலப்பறைகளை காமெடியாக காட்டுகிறேன்.
18 ம் நூற்றாண்டில் அவர் குடும்பம் எப்படி இருந்தது என்பதிலிருந்து படம் தொடங்கும். இதற்காக நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள பழைய ஜமீன் அரண்மனைகளை தேடிப்பிடித்து அதில் படமாக்கி இருக்கிறேன் என்கிறார் வி.சி.வடிவுடையான்.