ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகில் அடுத்தடுத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன் ஜுனியர் என்டிஆர் நடித்த 'ரபாஸா', கடந்த வாரம் ரவிதேஜா நடித்த 'பவர்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இன்று மகேஷ் பாபு, தமன்னா நடித்துள்ள 'ஆகாடு' படம் வெளிவருகிறது. சீனு வைட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகேஷ் பாபு நடித்து கடைசியாக வெளிவந்த படமான '1 நேநொக்கடைன்' படம் அவருடைய ரசிகர்களை மிகவும் ஏமாற்றியதால், இந்தப் படத்தை அவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் முதலில் பிரகாஷ்ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு சில நாட்கள் நடித்தார். ஆனால், படத்தின் உதவி இயக்குனர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவருக்கும் சண்டை ஆனது. அதன் பின் அந்த உதவி இயக்குனர் புகார் அளித்ததன் அடிப்படையில் பிரகாஷ்ராஜுக்கு தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்படலாம் என்ற நிலை வந்தது. இருந்தாலும் சில முன்னணி தயாரிப்பாளர்கள் தலையிட்டு, மேற்கொண்டு பிரச்சனை வளராமல் பார்த்துக் கொண்டனர். இருந்தாலும் பிரச்சனை காரணமாக தான் நடிக்காமல் விலகினாலும் படத்தைப் பற்றி பிரகாஷ்ராஜ் பாராட்டிதான் வருகிறாராம். நிச்சயம் 'ஆகாடு' படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்று அவர் சொல்லி வருகிறார்.
படத்தில் நடிக்காமல் வெளியேறினாலும், பிரகாஷ்ராஜின் இந்த குணத்தை தெலுங்குத் திரையுலகினர் பாராட்டி வருகிறார்கள். மகேஷ் பாபு நடித்த 'ஒக்கடு' படத்தில் வில்லனாக நடித்த அந்தப் படம் மாபெரும் வெற்றியடைய பிரகாஷ் ராஜும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.