ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல மாண்டலின் இசைக்கலைஞரான ஸ்ரீனிவாசன் உடல்நிலை பாதிப்பால் இன்று (செப்டம்பர் 19) அன்று காலமானார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் கொள்ளூரைச் சேர்ந்த சத்யநாராயணன்-காந்தம் தம்பதியின் மூத்த மகனான ஸ்ரீநிவாசனுக்கு ஒரு சகோதரர் மற்றும் 2 சகோதரிகள் உள்ளனர். இவருக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி விவகாரத்து பெற்று கொண்டு, மகனுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். இந்த விவகாரம் காரணமாக ஸ்ரீநிவாசனின் குடும்பத்தார் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர் மான்டலின் இசை குடும்பத்தின் வாரிசான 45 வயதாகும் இவருக்கு சமீபத்தில் கல்லீரல் ஆப்பரேஷன் நடைபெற்றுள்ளது. அதில் குணமாகி வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஸ்ரீநிவாசனுக்கு மகல்லீரலில் நோய் கிருமிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக செப்டம்பர் 2ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
மாண்டலின் ஸ்ரீநிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், நரேஷ் அய்யர் மற்றும் பாடகர்கள், பாடகிகள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். ஸ்ரீநிவாசனின் உடல் செப்டம்பர் 20ம் தேதி பகல் 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
மான்டலின் இசை உலகில் புகழ்பெற்றவராக திகழ்ந்த இவர் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.