‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெரு நாய்களை கல்லால் அடிக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது. அவற்றை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா நீண்டகாலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், பிராணிகள் நல வாரியத்திலும் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் நடிகை அமலாவும் நாய்கள் உள்பட அனைத்து பிராணிகளையும் ஆதரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, தானும் நாய்களை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், பருத்தி வீரன் ப்ரியாமணிக்கு புலிகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில மிருகக்காட்சிகளில் காட்டில் சுதந்திரமாக அலையும் புலிகளை கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைத்துள்ளார்கள். அது மிருக காட்சி சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், மனிதர்களை வாழ்நாள் முழுக்க ஒரு கூண்டிற்குள் அடைத்து வைத்தால் எவ்வளவு கொடுமையாக இருக்கும். அதே மாதிரிதானே விலங்குகளுக்கும் இருக்கும். அதனால் மிருக காட்சி சாலைகளில் புலிகளை கூண்டிற்குள் அடைத்து வைக்காமல், அவை காட்டுக்குள் சுதந்திரமாக திரிவது போன்று அவற்றை பராமரிக்க வேண்டும். அதுதான் வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ப்ரியாமணி.