குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்ட ஜெயில் ஷெட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புறம்போக்கு என்ற படத்தின் டைட்டிலில் திருத்தம் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். புறம்போக்கு என்ற டைட்டிலுடன் பொதுவுடமை என்ற வார்த்தையை சேர்த்து "புறம்போக்கு என்கிற பொதுவுடமை" என்று மாற்றி உள்ளார்.
இந்த மாற்றம் குறித்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அளித்துள்ள விளக்கம் வருமாறு: நம் நாட்டில் புறம்போக்கு என்று எதுவும் இல்லை. எல்லாமே பொது நிலம், மக்கள் நிலம். நாம்தான் அதனை நம் வசதிக்கேற்ப விளைச்சல் பொறம்போக்கு, பாசன பொறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு என்று பிரித்து வைத்திருக்கிறோம். எனவே பொறம்போக்கு என்பது ஊருக்கு பொதுவான இடம் என்று அர்த்தம். அதனால்தான் டைட்டிலை புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று வைத்திருக்கிறேன் என்கிறார் ஜனநாதன்.