ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆதித்யா சோப்ரா, ப்ரணீதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தாவாத்-இ-இஷ்க். இப்படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை புரொமோட் செய்யும் விதமாக உணவு யாத்திரை என்ற பெயரில் ஆதித்யாவும், ப்ரணீதியும் கடந்த ஐந்து நாட்களாக ஊர் ஊராக சுற்றி வந்தனர். ஐந்தாம் நாளான நேற்று டில்லியில் ஆரம்பித்த உணவு யாத்திரை சண்டிகரில் முடிந்தது.
டில்லியில் உணவு யாத்திரையை முடித்த ஆதித்யா-ப்ரணீதி இருவரும் முர்தலுக்கு சென்றனர். பின்னர் ப்ரணீதியின் சொந்த ஊரான அம்பாலாவுக்கு சென்றனர். அங்கு ப்ரணீதியின் வீட்டில் அவருக்கும், ஆதித்யாவுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ப்ரணீதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார், அப்படியே தனது உறவினர்களையும் சந்தித்தார். ஆதித்யா-ப்ரணீதி வருவதை அறிந்து ஏராளமான பேர் அங்கு கூடிவிட்டனர், இதனால் கூட்டத்தில் ஆதித்யா மாட்டிக்கொண்டார், பின்னர் அவர் பாதுகாப்பாக ப்ரணீதியின் வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டார். சிறிது நேரம் குடும்பத்தாரோடு பொழுதை கழித்தார் ப்ரணீதி, கூடவே ஆதித்யாவும் அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் இருவரும் விருந்தை முடித்து கொண்டு சண்டிகர் கிளம்பினர். அங்கு பஞ்சாபி உணவுவகைளை ரசித்து ருசித்து சாப்பிட்டு தங்களது உணவு யாத்திரையை முடித்தனர்.
கடந்த ஐந்து நாட்கள் இந்த உணவு யாத்திரையை மிகவும் ரசித்ததாகவும், பல்வேறு விதமான உணவுகளையும் ருசித்தாகவும் ஆதித்யாவும், ப்ரணீதியும் தெரிவித்துள்ளனர்.