பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வேடப்பன், வெளுத்துக்கட்டு உள்பட சில படங்களில் நடித்தவர் அருந்ததி. பெங்களூரைச் சேர்ந்தவரான இவருக்கும் விஜய், அஜீத், சூர்யா என்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் இருந்தது. ஆனால், எதுவும் கைகூடவில்லை. இருப்பினும் கிடைத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக, விமல்-பிரசன்னா நடித்த நேற்று இன்று என்ற படத்தில் ஒரு விலைமாது ரோலில் படம் முழுக்க ஒரு டீசர்ட்டை அணிந்து நடித்திருந்தார். அதையடுத்து, அருந்ததி நடிப்பில் தொட்டால் தொடரும், சரவணப் பொய்கை, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.
ஆனால், இதன்பிறகு நடிப்பதற்கு இன்னமும் எந்த கம்பெனியும் அருந்ததியை அணுகவில்லையாம். அதனால் சில மாதங்களாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் அருந்ததி, இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதத்தில் சென்னையை காலி செய்து விட்டு தனது சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட முடிவெடுத்துள்ளாராம். ஒருவேளை அதற்குள் தொட்டால் தொடரும், நாய்கள் ஜாக்கிரதை படங்கள் வெளியாகி ஹிட்டாக அமைந்து விட்டால், பெங்களூருக்கு திரும்பிச்செல்லும் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாராம் அருந்ததி.