'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து விடுவார். ஏற்கனவே இந்தப்பட்டியலில் ஷாரூக், அமீர், சல்மான் ஆகியோர் உள்ளனர்.
இதுப்பற்றி ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டால், என் படத்தின் லாபங்களை பொறுத்து நான் சம்பளம் நிர்ணயிக்கிறேன், அது எனது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர், சல்மான் கான் மற்றும் அமீர் கானுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் தர முன்வந்துள்ளது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் கரண் ஜோகர். ஆனால் இதுப்பற்றி அமீரும், சல்மானும் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.