கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து விடுவார். ஏற்கனவே இந்தப்பட்டியலில் ஷாரூக், அமீர், சல்மான் ஆகியோர் உள்ளனர்.
இதுப்பற்றி ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டால், என் படத்தின் லாபங்களை பொறுத்து நான் சம்பளம் நிர்ணயிக்கிறேன், அது எனது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர், சல்மான் கான் மற்றும் அமீர் கானுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் தர முன்வந்துள்ளது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் கரண் ஜோகர். ஆனால் இதுப்பற்றி அமீரும், சல்மானும் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.