‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
ஷங்கரின் ஐ படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபியும் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமாரும் வில்லன்களாக நடிக்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவுக்கு இவர்கள் இருவருக்குமே அழைப்பு இல்லை. அது மட்டுமல்ல, விழாவில் திரையிடப்பட்ட ஐ முன்னோட்டத்தில் சுரேஷ்கோபி, ராம்குமார் சம்மந்தப்பட்ட ஒரு ஷாட் கூட இல்லை. புகழ்பெற்ற மலையாள நடிகரும், தேசிய விருதை வென்றவருமான சுரேஷ் கோபி, அஜித் நடித்த தீனா உட்பட ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்.
நீண்டநாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை அழைத்தவர்கள் ஐ படத்தில் நடித்த சுரேஷ்கோபியை ஏன் அழைக்கவில்லை? ஐ படத்துக்காக சுரேஷ்கோபி கொடுத்த கால்ஷீட்டை இயக்குநர் ஷங்கர் சரியான முறையில் பயன்படுத்தவில்லையாம். அதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் கால்ஷீட் கேட்டபோது சுரேஷ்கோபி டேட் கொடுக்கவில்லை. இது தொடர்பான பிரச்சனையில் சுரேஷ்கோபிக்கும் ஷங்கருக்கும் மன வருத்தம் ஏற்பட்டது. அதனால் அழைக்கவில்லையாம்.
உண்மை இப்படி இருக்க, சுரேஷ்கோபிக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தவிர்க்க முடியாத படப்பிடிப்பு வேலைகள் இருந்ததால்தான் அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றும், அவரின் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருப்பதால்தான் ஐ டீஸரில் அவரைக் காட்டாமல் ஷங்கர் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் என்றும் சுரேஷ்கோபி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.