ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலகத்தையே உலுக்கிய வேதியியல் பேரிடர்களில் ஒன்றான இந்தியாவின் போபால் விஷவாயு சம்பவம், போபால்: ஏ ப்ரே பார் ரெயின் என்ற பெயரில் படமாக்கப்பட உள்ளது. சகாரா மூவி ஸ்டூடியோஸ் மற்றும் ரைசிங் ஸ்டார் என்டர்டைமன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் மார்டின் ஷீன், கல் பென், ராஜ்பால் யாதவ், தன்னிஷ்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட துயரம் சம்பவம் நடந்து வரும் டிசம்பருடன் 30 வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த படமும் வந்ததில்லை. இந்த கோர சம்பவத்தில் ஏறக்குறைய 3800 பேர் உயிரிழந்தனர். அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டனர். இந்த வாயு பாதிப்பால் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் 15,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.
இந்த விஷவாயு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் இந்த படத்தில் கூறப்பட உள்ளது. இதில் திலிப் என்ற ஏழை கதாபாத்திரத்தில் ராஜ்பால் யாதவ் நடிக்க உள்ளார். கதைப்படி, ஏழையான திலிப், போபால் யூனியன் கார்பரேட் ஆலையில் வேலை செய்கிறார். அவர் மூலமாக தான் நமக்கு அந்த துயர சம்பவம் பற்றிய விபரங்கள் காட்டப்பட உள்ளது. இந்த சம்பவம் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது என்ற மெசேஜை தான் இந்த படத்தின் மூலம் பட தயாரிப்பாளர்கள் கூற உள்ளனர்.
உண்மை சம்பவத்தை அப்படியே படமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் அப்பகுதி மக்கள் சந்திக்கும் துயரங்களும் காட்டப்பட உள்ளது. இந்த படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்பட உள்ளது.