ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
வீராச்சாமி படத்தில் டி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பத்து பத்து, உனது விழியிலே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விபசார வழக்கு, தன்னிடம் உல்லாசம் அனுபவித்த தொழில்அதிபருடன் எடுத்துக் கொண்ட அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியது உள்ளிட்ட விவகாரங்களுக்காக சிறைவாசம் அனுபவித்தது என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்தவர் மாடலிங் அழகியும், நடிகையுமான பத்மா நாராயணன். இவர் தனது பெயரை லஸ்யா என மாற்றிக் கொண்டு புழல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
அம்மணிக்கு சமீபமாக குடல்வால் ஆபரேஷன் நடந்திருக்கிறது. அதை ரகசியமாக செய்துகொண்டு கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்கும் லஸ்யா கூடிய விரைவில் கவர்ச்சியில் நமீதா இடத்தை பிடிப்பேன் என சபதம் செய்திருக்கிறாராம்.
நமீதாவிற்கும், லஸ்யாவிற்கும் நிறையவே ஒற்றுமை! உருவத்தில் மட்டுமல்ல... நமீதா மாதிரி லஸ்யாவிற்கும் தாய்மொழி குஜராத்திதான். ஆனால் தந்தைமொழி மட்டும் கும்பகோணம் தமிழ் என்பது கூடுதல் சிறப்பு. மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் என கால்டஜன் கவர்ச்சி ஆட்சி புரியவிருக்கும் லஸ்யா, தன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளில் இருந்த நீதிமன்றம் வாயிலாக கடந்த ஆண்டே விடுதலை ஆகி விட்டேன் என்கிறார்.