தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்துள்ள கத்தி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா தனது குழுமத்தினருடன் நேற்று பிரஸை சந்தித்தார். சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகில் உள்ள தாஜ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதோடு, அவர்களின் பெயர், எந்த பத்திரிகையில் இருந்து வருகிறார்கள் என்பதையும் பதிவேட்டில் எழுதி வாங்கிக்கொண்டனர். நிருபர்கள் என்ற பெயரில் யாரேனும் உள்ளே நுழைந்து பிரச்சினையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் கண்காணித்துக் கொண்டேயிருந்தனர்.
இதையடுத்து, சுபாஸ்கரன் அல்லிராஜா கூறுகையில், கத்தி படத்தின் ஆடியோ வெளியீடு 18-ந்தேதி நடக்கிறது. கத்தி படம் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தவே நடந்த இந்த பிரஸ்மீட் என்று தெரிவித்த அவர், எங்களை ராஜபக்சேவின் கைக்கூலி போன்று நினைத்து கத்திக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ராஜபக்சே எப்படியோ அதேபோல்தான் எனக்கும். நானும் தமிழன்தான் என்று தெரிவித்த அவர், எதிர்ப்புகளை மீறி கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வரும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.