தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டி.வி., நடிகை தற்கொலை வழக்கில் சரணடைந்த காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20). இவர் தெலுங்கு படம், டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர்களது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர் ஆகும். தனது மகளுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சீனிவாச ரெட்டி குடும்பத்துடன் சென்னை வந்தார்.
சசிரேகா சினிமாவில் நடிக்க நடனம் கற்றுக்கொண்டு இருந்தார். அப்போது மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்க்கட்டளை ஈஸ்வரன் நகரை சேர்ந்த ஷான் (26) என்ற டான்ஸ்மாஸ்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம்தேதி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் காதலனுடன் தங்கியிருந்த சசிரேகா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கு போட்டுக் கொண்ட போது காதலன் ஷான் அங்கு இல்லை.
இந்த சம்பவம் குறித்து தெரிந்ததும் காதலன் ஷான் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
எனது சொந்த ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம். பிளஸ் 2 வரை படித்திருக்கிறேன். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சினிமா ஆசையில் சென்னை வந்தேன். இதற்காக நடனம் கற்றுக்கொண்டேன். சினிமாவில் துணை நடிகைகளை சூட்டிங்கிற்கு அழைத்து செல்லும் வேலையையும் செய்து வந்தேன். அப்படித்தான் சசிரேகா எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 6 மாதங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்யச் சொல்லி சசிரேகா தொல்லைப்படுத்தி வந்தார். அவரை தவறான வழிக்கு சிலர் அனுப்ப முயன்றனர்.
என்னை திருமணம் செய்து கொண்டால் சினிமாவில் நடிக்க கூடாது. தவறான வழிக்கு செல்லக்கூடாது என்றேன். இதை ஏற்றுக்கொண்ட சசிரேகா கடந்த 6ம்தேதி என்னுடன் வந்தார். ஈஞ்சம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கினோம். 7ம்தேதி மதியம் சாப்பிட்ட பின்னர் அவருடைய தாய் செல்போனில் உடனே வா என்று அழைத்தார். சசிரேகாவும் கிளம்பி செல்ல முயன்றார். `நாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். சினிமாவில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டு அம்மா அழைத்ததும் சினிமா சூட்டிங்கிற்கு போகிறாயா?' என்றேன். இதையடுத்து எங்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று சசிரேகா கூறினார். இதேபோல ஏற்கனவே 2 முறை தற்கொலை செய்வதாக அவர் மிரட்டி இருக்கிறார். பின்னர் சில மணி நேரம் கழித்து பேசுவார். அதுபோல அன்றும் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டினார். நான் வெளியே சென்றால் சரியாகி விடும் என நினைத்து வெளியே சென்றேன். இரவு சசிரேகா தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து பயந்து நண்பர்கள் வீட்டில் தங்கினேன். போலீசார் தேடுவதை அறிந்து சரண் அடைந்தேன், என்று ஷான் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஷானுடன் பானு என்ற துணை நடிகையும் போலீசில் சரணடைந்துள்ளார். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.