பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அழகி, பொம்மலாட்டம், குறிஞ்சி மலர் சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறவர் தேசிகாஸ்ரீ. அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மசாலா குடும்பம் சீரியலில் அறிமுகமாகி இதுவரை 7 சீரியல்களில் நடித்து முடித்து விட்டேன். தற்போது 3 சீரியல்களில் நடித்து வருகிறேன்.
சின்னத்திரையில் நடிப்பதை சிலர் ரொம்ப எளிதானது என்று நினைக்கிறார்கள். பொதுவாக எல்லோருக்கும் 8 மணிநேர வேலை என்றால் எங்களுக்கு மட்டும் 12 மணி நேர வேலை. காலை 9 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு 9 மணிக்குதான் வீடு திரும்புகிறோம். என்றாலும் இந்த வேலையை இஷ்டப்பட்டு செய்வதால் கஷ்டத்தை பற்றி கவலைப்படுவதில்லை.
மலையாளம், மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்து ஏராளமானவர்கள் தமிழ் சீரியல்களுக்கு நடிக்க வருகிறார்கள். அதே மாதரி எனக்கு தெலுங்கு, மலையாள சீரியல்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. இதற்காக கதை கேட்டு வருகிறேன். சில வாய்ப்புகள் வந்தது அவை சின்ன கேரக்டர் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. விரைவில் மலையாள சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறேன். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. என்கிறார் தேசிகாஸ்ரீ.