கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
டிஜிட்டல் சினிமா வந்த பிறகு சினிமா எடுப்பது மிகவும் எளிமையாகிவிட்டது. எதையாவது புதுமையாக செய்து மக்களை கவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதுகை மாரிசா என்பவர் 12 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைக்க நினைக்கிறார். படத்தின் பெயர் நடுஇரவு. புதுமுகங்கள் நடிக்கிறார்கள், உலக நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ரமேஷ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தொடங்கி வைத்தார்.
தனது புதிய முயற்சி பற்றி இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது: பல வருடங்காக திட்டமிட்டு இந்த முயற்சியை செய்கிறேன். வருகிற 19ந் தேதி இந்த படப்பிடிப்பு நடக்கிறது. மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் பக்காவாக இருக்கிறது. மோனிகா என்ற சிறுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிப்பவர்கள் அனைவருக்குமே ஒத்திகையும், பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு திகில் கதை என்பதால் இரவிலேயே படத்தை எடுத்து முடித்து விடுகிறோம். என்றார்.