இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கும் ஐ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றபோது... திருஷ்டிப்பரிகாரமாக பல சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று...அனிருத்துக்கு ஏற்பட்ட அவமரியாதை. புறத்தோற்றத்தில் சின்னப்பையன்போல் இருந்தாலும், அனிருத் இன்றைய தேதியில் முன்னணி இசையமைப்பாளர். இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத்.
அந்தளவுக்கு தமிழ்த்திரை உலகில் முக்கியமானவராக விளங்கும் அனிருத்தை அழைத்து ஐ படத்தில் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஐ படத்தில் இடம்பெற்ற பாடல்களை, அதே பாடகர்களை வைத்து ஐ இசைவெளியீட்டு விழாவில் பாட வைத்தார்கள். அப்படி பாடுவதற்காக அனிருத்தை மேடைக்கு அழைத்தபோது, அர்னால்டை விட பெரிய பாடி பில்டர் நம்ம ஊரில் இருக்கிறார். இப்போது அவரை அழைக்கப்போகிறேன் - என்று கிண்டலாக சொல்லிவிட்டு அனிருத்தை அழைத்தார் சின்மயி.