இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தின் இசையை தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரும், படத்தின் நாயகன் ராம் சரண் தேஜாவின் அப்பாவுமான நடிகர் சிரஞ்சீவி நேற்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, “நான் திரையுலகை விட்டுக் கொஞ்ச காலம் பிரிந்திருந்தாலும் எனது மகன் ராம்சரண் என்னுடைய இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருப்பது பெருமையாக உள்ளது. எனது 150வது படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வருடத்தின் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்,” என்றார்.
ராம்சரண் தேஜா பேசுகையில், “ நீலி...ரங்குல...பாடல் இதுவரை வெளிவந்த என்னுடைய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடலாக இருக்கும். அப்பாவின் 150வது படத்தை எனது அம்மா பெயரில் தயாரிக்க உள்ளோம்,” என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் தமிழ்ப் படங்களின் இசை வெளியீடு அடிக்கடி பிரம்மாண்டமாக இங்கு நடைபெற்றாலும், ஒரு தெலுங்குப் படத்தின் இசை வெளியீடு நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இந்தப் பாடல்களின் வெற்றியால் யுவனுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறார்கள்.