கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணியில் ஜெய் ஜோடியாக நடித்தார், தற்போது ஒரு திகில் படத்தில் நெடுஞ்சாலை ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றம் இரண்டாவது வரிசை ஹீரோக்களையும் அவருடன் நடிக்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. அப்படி ஆசைப் படுகிறவர்களில் ஒருவர் பரத்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம்.
என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின் கலரையும் மாற்றிவிடும் கவுதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டும். என் கனவு தேவதை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த மூன்றும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பரத்.