ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது படங்களுக்காக கடின உழைப்பை அளித்து வரும் ஷாருக்கான் பெரிய அளவில் புகழ்பெற்றிருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவிலேயே நடித்து வருகிறார். இது பற்றி சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் நான் 55 படங்களில் நடித்துள்ளேன். அதிக பட்சம் வருடத்திற்கு 2 படங்கள் என்ற அளவிலேயே நடித்து வந்துள்ளேன். அதனாலேயே மக்கள் என் படங்களை அதிகம் ரசித்து பார்க்கின்றனர்.
தொடர்ந்து இதனையே கடைபிடிக்க நினைக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிப்பதால் அதிக கவனம் செலுத்த முடிகிறது. எனது முழு பங்களிப்பையும் அளிக்க முடிகிறது. ஒரு படம் முடித்த பிறகு சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு, என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறேன். பின்னர் அடுத்த படத்தின் பணிகளில் இறங்குகிறேன். ஒரு படம் முடித்த உடனேயே அடுத்த படத்தின் வேலைகளில் இறங்குவது என்னை ரொம்பவே எரிச்சல் அடைய செய்து விடுகிறது. அதனை அப்படி நான் செய்வதில்லை.
கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் இருந்து தற்போது வரை இதனையே தொடர்ந்து செய்து வருகிறேன். அதனால் எனது பணியை உற்சாகத்துடன் செய்கிறேன். இவ்வாறு தன் படங்களுக்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை பற்றியும், நேர்த்தியாக படங்களை கையாள்வது பற்றியும் ஷாருக்கான் விளக்கினார்.