இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள, ஐ படத்தின் ஆடியோ விழா இன்று மாலை சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ஓகே சொன்ன உடனேயே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்ட அர்னால்ட் அவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அர்னால்ட்டை, சந்திக்க முதல்வரும் அனுமதி அளித்திருந்தார். இதனையடுத்து, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்ட், பகல் 2.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சென்று சந்தித்தார். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
முதல்வரை சந்தித்தது பற்றி அர்னால்டு கூறியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தில் அவர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக கல்வி, தொழில் போன்றவை இருக்கிறது. மிகச்சிறந்த தலைவியாக அவர் செயல்படுகிறது, அவரை சந்தித்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.