'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மர்தாணி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட்டின் பார்வையையும் தன் பக்கம் திரும்ப செய்திருக்கும் நடிகை ராணி முகர்ஜி, சமீபத்தில் தனது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு கரீனா கபூர்-சைஃப் அலிகான் தம்பதி வாழ்த்து தெரிவித்ததுடன் ராணி நிச்சயம் ஒரு நல்ல தாயாக இருப்பார் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
ராணி முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில், தனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 2 வருடங்கள் கழித்தே அதை பற்றி யோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 33 வயதாகும் கரீனா கபூர். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பயப்படவில்லை. அது ஒரு இனிமையான அனுபவம்.
இருப்பினும் சரியான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறேன். தற்போது நாட்டில் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பிசியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை வரும் போதெல்லாம், இருவரும் கரிஷ்மாவின் குழந்தைகளுடன் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்களாம்.
கரிஷ்மாவின் குழந்தைகளான சமீரா மற்றும் கியான் ராஜ், சைப் அலிகானின் குழந்தைகளான இப்ராஹிம் மற்றும் சாராவுடனேயே விளையாடுகிறார்களாம். தனது சகோதரி கரிஷ்மாவும், தாங்களும் ஒரே குடும்பமாக இருப்பதால் அவர்களுடனேயே அதிக நேரத்தை செலவிடுவதாக கூறும் கரீனா, வெளியில் சென்றிருந்தாலும் சார்பிடுவதற்கு வீட்டிற்கு வந்து அவர்களுடனேயே சாப்பிடுகிறாராம்.