ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைனா, கும்கியைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் கயல். அனைத்துகட்ட படப்பிடிப்புகளும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி, படத்தை வெளியிடும் தேதியை முடிவு செய்யவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதை வேலைகளிலும் இறங்கி விட்ட பிரபுசாலமன், அந்த படத்தை தயாரிப்பதற்கு உதயநிதி ஸ்டாலினை அணுகினாராம். கதையை கேட்ட அவருக்கும் பிடித்து விட்டதாம். அதனால் உதயநிதிதான் பிரபுசாலமனின் அடுத்த படத்தை தயாரிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி கதை பண்ணியிருந்த பிரபுசாலமன், அடுத்த படத்தையும் ஒரு விலங்கை மையப்படுத்திதான் கதை பண்ணியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து கிராமத்து கதைகளாக படமாக்கி வந்த அவர், புதிய படத்தை நகரத்து பின்னணியில் இயக்கப் போகிறாராம். கயல் படம் வெளியானதும், அந்த படம் குறித்து முழுத் தகவல்களும் வெளியாகுமாம்.