ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக இணைந்த அஞ்சான் தோல்வியடைந்து பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. கெளதம்மேனன சொன்ன கதை பிடிக்கவில்லை என்று அவர் படத்தில் இருந்து விலகிய சூர்யா, லிங்குசாமியிடம் கதை கேட்டபோதும் முதலில் மூன்று கதைகளை சொன்னார். அதில் அவருக்கு உடன்பாடில்லை என்றபோது தான் நான்காவதாக அஞ்சான் கதையை சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார்.
அதோடு, கெளதம்மேனனையும் பகைத்தாயிற்று, இனி தாமதிக்கக்கூடாது என்று உடனடியாக அஞ்சான் படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால் படம் பெரிய தோல்வியை கொடுத்து விட்டதால் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவே இல்லை சூர்யா. மேலும், அஞ்சானை மறக்க வேண்டும் என்பதற்காக மாஸ் பட வேலைகளில் மனசை திருப்பி விட்டுள்ளார்.
இந்த நேரத்தில் அவரது தம்பி கார்த்தி லிங்குசாமியும் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவரிடம் கதையை கேட்டு விட்ட கார்த்தி, இன்னொரு தடவை கதை சொல்லுங்க என்று கேட்டு குழப்பி விடக்கூடாது என்பதற்காகவே, தற்போது மலேசியாவுக்கு கதையை பட்டை தீட்டச்சென்றிருக்கிறாராம் லிங்குசாமி. அவருடன் சதுரங்க வேட்டை வினோத் உள்பட மேலும் சில இயக்குனர்களும் உடன் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.