டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது சத்யமேவ ஜெயதே டிவி நிகழ்ச்சி மூலமும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் அமீர்கான் பேசினார். அப்போது அவர், நாட்டில் எத்தனை பேர் நேர்மையாக வரி செலுத்துகிறார்கள்? அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் துரோகிகள் தான். அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் ஊழல் உள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை எம்.பி.,க்களை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. அதற்கு பதில் முதலில் நாம் ஒவ்வொருவரும் நம்மை சுயபரிசோதனை செய்து, நம்மிடமுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தாலே நாட்டின் மதிப்பு தன்னால் உயரும். சமூகத்திற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினால் நாம் சமூக சேவகர் ஆக வேண்டியதில்லை, நாம் அனைவரும் அரசு சாரா ஒரு நிறுவனம் என்று நினைத்து செயல்பட்டாலே போதும் என தெரிவித்துள்ளார்.