இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தாவீத் இ இசாக் படக்குழுவினர் தங்களின் உணவு யாத்திரையை மும்பையில் நேற்று துவங்கியது. பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இந்த பயணம் சண்டிகர் வரை செல்ல உள்ளது.
தாவீத் இ இசாக் படக்குழுவின் உணவு பயணத்தின் முதல் நாளில் சிறப்பம்சங்கள் :
* மும்பையின் மெட்ராஸ் காபேயில் துவங்கிய இந்த பயணத்தில் ஆதித்யா ராய் கபூர், பகினிதி சோப்ரா கலந்து கொண்டு, பட்டர் இட்லி, ரச வடை, தோசை, பில்டர் காபி போன்ற தென்னிந்திய உணவு வகைகளை ரசித்து சாப்பிட்டனர். பின்னர் சாதாரணமாக உடையணிந்து சாலைகளில் நடந்து சென்றனர்.
* மெட்ராஸ் காபேக்கு வெளியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆதித்யா ராயை கண்ட, பள்ளி சிறுவன் ஒருவன் தனது நோட்டை எடுத்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார். ஆதித்யா ராயுடன் பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் ஸ்கூல் பஸ்சை தவற விட்ட அந்த சிறுவனுக்கு தனியாக கார் ஏற்பாடு செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார் ஆதித்யா ராய்.
* ஆதித்யாவின் ஐடியாபடி பரினிதி சோப்ராவுடன் பைக்கில் சென்ற ஆதித்யா, மெட்ராஸ் காபேயில் இருந்து 85 கி.மீ.,கள் பயணம் செய்தனர். பின்னர் மீண்டும் காரில் ஏறி பயணம் செய்தனர்.
* ஆதித்யாவுடன் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பரினிதி சோப்ரா, ஒரு ஓடையை கண்டதும் காரை நிறுத்தி விட்டு ஆதித்யாவையும் இழுத்துக் கொண்டு அங்கு ஓடினாராம். உடன் சென்ற படக்குழுவினரும் அந்த ஓடை அருகே சென்று போட்டோ எடுத்துக் கொண்டார்களாம்.
* தலசாரி பகுதிக்கு சென்று பார்சி இனத்தவர்களைச் சந்தித்த ஆதித்யாவும், பரினிதி சோப்ராவும், பின்னர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டுள்ளனர். ஆதித்யாவின் அம்மாவிற்கும் பார்சி உணவு வகைகள் பிடிக்கும் என்பதால், தான் சாப்பிட்ட பிறகு தனது அம்மாவுக்கு அவர் பேக் செத்து எடுத்துச் சென்றாராம்.
* மதிய உணவுக்கு பிறகு பார்சி குடியிருப்பு எதிரே உள்ள பெண்கள் பள்ளிக்கு சென்ற ஆதித்யா ராயும், பரினிதி சோப்ராவும், அவர்களுடன் கலந்துரையாடினர்.
* தொடர்ந்து சூரத்தில் உள்ள புகழ்பெற்ற ஐஸ்க்ரீம் சென்டருக்கு சென்றனர். அங்கு இவர்கள் வந்த செய்தி பரவியதை அடுத்து மக்கள் ஏராளமாக குவிந்தனர். ஆதித்யா மற்றும் பரினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் முண்டிஅடித்துச் சென்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்ததால் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.