Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உணவு யாத்திரையை துவங்கியது தாவீத் இ இசாக் படக்குழு

14 செப், 2014 - 15:24 IST
எழுத்தின் அளவு:

தாவீத் இ இசாக் படக்குழுவினர் தங்களின் உணவு யாத்திரையை மும்பையில் நேற்று துவங்கியது. பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இந்த பயணம் சண்டிகர் வரை செல்ல உள்ளது.

தாவீத் இ இசாக் படக்குழுவின் உணவு பயணத்தின் முதல் நாளில் சிறப்பம்சங்கள் :


* மும்பையின் மெட்ராஸ் காபேயில் துவங்கிய இந்த பயணத்தில் ஆதித்யா ராய் கபூர், பகினிதி சோப்ரா கலந்து கொண்டு, பட்டர் இட்லி, ரச வடை, தோசை, பில்டர் காபி போன்ற தென்னிந்திய உணவு வகைகளை ரசித்து சாப்பிட்டனர். பின்னர் சாதாரணமாக உடையணிந்து சாலைகளில் நடந்து சென்றனர்.


* மெட்ராஸ் காபேக்கு வெளியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆதித்யா ராயை கண்ட, பள்ளி சிறுவன் ஒருவன் தனது நோட்டை எடுத்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார். ஆதித்யா ராயுடன் பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் ஸ்கூல் பஸ்சை தவற விட்ட அந்த சிறுவனுக்கு தனியாக கார் ஏற்பாடு செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்தார் ஆதித்யா ராய்.


* ஆதித்யாவின் ஐடியாபடி பரினிதி சோப்ராவுடன் பைக்கில் சென்ற ஆதித்யா, மெட்ராஸ் காபேயில் இருந்து 85 கி.மீ.,கள் பயணம் செய்தனர். பின்னர் மீண்டும் காரில் ஏறி பயணம் செய்தனர்.


* ஆதித்யாவுடன் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டோ எடுத்துக் கொண்ட பரினிதி சோப்ரா, ஒரு ஓடையை கண்டதும் காரை நிறுத்தி விட்டு ஆதித்யாவையும் இழுத்துக் கொண்டு அங்கு ஓடினாராம். உடன் சென்ற படக்குழுவினரும் அந்த ஓடை அருகே சென்று போட்டோ எடுத்துக் கொண்டார்களாம்.


* தலசாரி பகுதிக்கு சென்று பார்சி இனத்தவர்களைச் சந்தித்த ஆதித்யாவும், பரினிதி சோப்ராவும், பின்னர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டுள்ளனர். ஆதித்யாவின் அம்மாவிற்கும் பார்சி உணவு வகைகள் பிடிக்கும் என்பதால், தான் சாப்பிட்ட பிறகு தனது அம்மாவுக்கு அவர் பேக் செத்து எடுத்துச் சென்றாராம்.


* மதிய உணவுக்கு பிறகு பார்சி குடியிருப்பு எதிரே உள்ள பெண்கள் பள்ளிக்கு சென்ற ஆதித்யா ராயும், பரினிதி சோப்ராவும், அவர்களுடன் கலந்துரையாடினர்.


* தொடர்ந்து சூரத்தில் உள்ள புகழ்பெற்ற ஐஸ்க்ரீம் சென்டருக்கு சென்றனர். அங்கு இவர்கள் வந்த செய்தி பரவியதை அடுத்து மக்கள் ஏராளமாக குவிந்தனர். ஆதித்யா மற்றும் பரினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள மக்கள் முண்டிஅடித்துச் சென்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்ததால் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in