ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமரகாவியம் படத்தை பற்றி இரண்டு தரப்பான விமர்சனங்கள் வந்தபோதும் ஹீரோயின் மியாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அதுவும் குறிப்பாக கிளைமாக்சில் அவர் மரணத்தை நெருங்கும் நேரத்தில் வாழ ஆசைப்படும் அந்த முக உணர்வை காட்டிய விதம் மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது.
அமரகாவியம் வெளியான அன்று தனது கல்லூரி தேர்வை எழுதிக் கொண்டிருந்தார் மியா. மியாவின் நடிப்புக்காக அவர் கல்லூரி பல சலுகைகளை வழங்கி இருக்கிறது. இதுபற்றி மியா கூறியிருப்பதாவது:
சொந்த ஊர் கோட்டையம் பக்கம் உள்ள பாலா. அங்குள்ள கல்லூரியில்தான் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். முதல் வகுப்பிலிருந்தே உள்ளூரில் படிப்பதால் என்னை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் நடித்து விட்டேன். தமிழில் அமரகாவியம் முதல் படம்.
எனது படங்களை எங்கள் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் பார்த்து விடுவார்கள். தங்கள் கல்லூரி மாணவி நல்ல நடிகையாக இருப்பது அவர்களுக்கு சந்தோஷம். கல்லூரியில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எப்பவேணாலும் கிளாஸ் போகலாம், வரலாம். எத்தனை நாள் வேணாலும் லீவு எடுத்துக்கலாம். ஆனா எக்ஸ்சாம்ல கண்டிப்பாக அட்டன் பண்ணனும். பாசும் பண்ணணும். இந்த இரண்டையும் நான் கரெக்டா செய்திடுவேன். அதான் அமரகாவியம் ரிலீசப்போ நான் தமிழ்நாட்டுக்கு வரமுடியாமல் எக்ஸாம் எழுதிக்கிட்டிருந்தேன்.
நான் காலேஜ் போகாத நாட்கள்ல என்ன நடந்துச்சுன்னு அந்த பாடத்தை பிரண்ட்சுங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். வீட்டில் இருந்தால் பாதி நேரம் படிப்புக்கு, பாதி நேரம் டான்சுக்குன்னு ஒதுக்கிடுவேன். நல்ல நடிகைன்னு பெயர் எடுத்த மாதிரி நல்ல டான்சர்னு பெயர் எடுக்க ஆசை என்கிறார் மியா.