டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சல்மான் கானுக்கு தான் அடுத்து நடிக்க போகும் படத்தை எண்ணி கவலை வந்துள்ளது. கிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து சல்மான் கான், பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சூரஜ் இயக்குகிறார். சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு சல்மானும், சூரஜூம் இணைந்து பணியாற்றுகின்றனர். சரி, இதில் என்ன கவலை சல்மான் கானுக்கு...?
சல்மானின், சமீபத்திய படங்களில் எல்லாம் ஆக்ஷ்ன் காட்சிகள் தூள் பறக்கும், அதுமட்டுமின்றி முழுக்க முழுக்க கமர்ஷியல் ரீதியான படங்களில் நடித்து வருகிறார். இந்நியைலி்ல தற்போது அவர் கமிட்டாகியுள்ள சூரஜ் படத்தில், பிரேம் என்கிற அவரது கதாபாத்திரம் முற்றிலும் அமைதியான கேரடக்டராம். சமீபகாலமாக ஆக்ஷ்ன், பரபரப்பு என்று நடித்துவிட்டவர் இப்போது ரொம்ப அமைதியாக நடிக்க பயப்படுகிறார்.
இதுகுறித்து சல்மான் கூறியுள்ளதாவது, இந்தப்படத்தில் நான் நடிக்கவே ரொம்ப சிரமமாக இருக்கிறது. சூரஜ் உடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றினேன், அப்போது நான் நடித்த படங்களே வேறு, இப்போது நான் நடித்து வரும் படங்கள் வேறு... என்னிடம் எவ்வளவோ மாற்றங்கள், நான் எப்படி அமைதியான கேரக்டரில் நடிப்பது, நான் இந்த கேரக்டருக்கு சரியானவன் தானா.? என்று கூறியுள்ளார்.
கவலைப்படாதீங்க சல்மான், நிச்சயம் நீங்கள் பிரேம் கதாபாத்திரத்தில், சிறப்பாக நடிப்பீர்கள் என்று உங்களது ரசிகர்கள் நம்புகிறார்கள். உங்களது வித்தியாசமான நடிப்பை காண அவர்களும் ஆர்வமாய் இருக்கின்றனர். அதனால் பயமின்றி நடியுங்கள்.