ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
'சுப்பிரமணியபுரம்' படத்தில் அறிமுகமானவர் சுவாதி, அதன் பின் தொடர்ச்சியாக தமிழ்ப் படங்களில் நடிக்காமல் அவ்வப்போதுதான் நடித்து வருகிறார். சென்ற ஆண்டு வெளிவந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் ஓரளவுக்கு அவருடைய பெயரை தமிழில் நிலைக்க வைத்தாலும் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த 'வட கறி' படம் நிறையவே ஏமாற்றி விட்டது. தற்போது 'அமளி துமளி, கார்த்திகேயா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் தெலுங்கு செய்திச் சேனல் ஒன்று அவர் தமிழ் நடிகர் ஒருவர் மீது காதல் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சுவாதி.
“திரும்பவும் என்னைப் பற்றிய திருமண வதந்திகள் பரவி வருகிறது. ஒரு தெலுங்குச் சேனலில் என்னுடைய திருமணச் செய்தியைப் பார்த்தேன். நான் அந்த தமிழ் நடிகருடன் எப்படி காதல் கொண்டேன், எங்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள் என்றெல்லாம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நான் தனிமையில் காதலித்துக் கொண்டிருக்கிறேன், எதைத் தெரியுமா, என் ஃபிரிட்ஜையும், அதிலுள்ள உணவுப் பொருட்களையும் தான் காதலிக்கிறேன்,” என கிண்டலாகச் சொல்லியிருக்கிறார்.