தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக படங்கள் திரைக்கு வரும் நாளில் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடரும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது. இதனால் பல படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தியேட்டருக்கு வர முடியாமல் சிக்கலை சந்திக்கின்றன.
இதுபற்றி டைரக்டர் பேரரசு கூறும்போது, சமீபகாலமாக படங்களை தடை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆரம்பத்தில் எந்த பிரச்சினையும் செய்வதில்லை. படம் திரைக்கு வரும் நாள் வரை காத்திருந்து நாளை ரிலீஸ் என்றால் இன்று தடை கோரி வழக்குத் தொடர்கிறார்கள். இதனால் பல படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தியேட்டருக்கு வர முடியாமல் போகிறது.
இதன் காரணமாக, ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்றால் ரிலீசுக்கு முன்பே அவரிடம் பேசி தீர்த்து ஒரு முடிவுக்கு வரலாம். அதைவிட்டு விட்டு ரிலீஸ் அன்று தடை போடுவது அவரது கழுத்தை நெறிப்பதற்கு சமமானது. இதனால் அவர் எவ்வளவு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதால், தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இந்த மாதிரி படங்களுக்கு தடை கோருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறும் பேரரசு, இதுபோன்ற பிரச்சினைகளை பெரும்பாலும் சின்ன படங்கள்தான் சந்தித்து வருகின்றன. ஆனால் இன்றைக்கு சினிமாவை வாழ வைப்பதே சின்ன படங்கள்தான். அதனால் இந்த விசயத்தில் புருடியூசர் கவுன்சில் தலையிட்டு சினிமாவை வாழ வைக்க வேண்டும் என்கிறார் பேரரசு.