'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அட்டகத்தியில் ஆடிப்போனா ஆவணி, நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா, சூதுகவ்வும் படத்தில் காசு பணம் துட்டு மணி மணி போன்ற ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர் கானா பாலா. அதையடுத்து, படத்துக்குப் படம் கானா பாலாவின் பாடல்களை கேட்க முடிகிறது. அதோடு சில பாடல்களில் நடனமாடியும் வருகிறார்.
இந்த நிலையில், தற்போது சோக்குசுந்தரம் என்ற படத்தில் கப்பல் விடாதே கட்டாந்தரையில, கவிழ்ந்து விடாதே கன்னக்குழியிலே என்றொரு பாடலை பாடியிருக்கிறார் கானா. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், டைரக்டர் வி.சி.குகநாதன், டைரக்டர் பேரரசு, அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா, நடிகர் பொன்வண்ணன் மற்றும் சோக்குசுந்தரம் படத்தின் டைரக்டர் ஆனைவாரி ஸ்ரீதர், நாயகன் ராமசாமி, நாயகிகள் செளஜன்யா, ரிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கானா பாலா பேசும்போது, இந்த படத்தின் ஹீரோ ராமசாமியை கலர் கலரான டிரஸ் போட வைத்து, கழுத்தில் பல செயின்களை போட வைத்து ஒரு புதுமையான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறார், டைரக்டர் ஆனைவாரி ஸ்ரீதர். எல்லா ஊர்களிலும் ஒரு தெருவில் இந்த மாதிரி சோக்குசுந்தரங்கள் இருப்பார்கள். அந்த வகையில் இந்த ராமசாமிக்கு இந்த வேடம் ரொம்பவே பொருந்தியிருக்கிறது.
மேலும், வழக்கம் போல் இந்த படத்திலும் நான் லவ் பெயிலியர் பாடல்தான் பாடியிருக்கிறேன். ஆரம்பத்தில் நானே எழுதி பாடினேன். ஆனால் இப்போது மற்றவர்கள் எழுதி கொடுத்தாலும் பாடுகிறேன். இந்த படத்தில் இளையகம்பன் எழுதிய பாடலை பாடியிருக்கிறேன். என் மனசுக்கு நிறைவு தந்த பாடல். அற்புதமான வரிகள், அதேபோல் டியூனும் எளிதில் ஹிட்டாகக்கூடியது. ஒரு பாடகனாய் இந்த பாடலை ரசித்து பாடினேன்.
அதனால் இந்த பாடலும் எனது ஹிட் பாடல் வரிசையில் இடம்பெறும் என்று பேசிய கானா பாலா, எனக்கு முன்பு பேசியவர்கள், கானா பாலா தற்போது சினிமாவில் டாப்பில் இருப்பதாக சொன்னார்கள். அப்படியெல்லாம் இல்லை. நான் சினிமா மேப்பில் இருக்கிறேன் அவ்வளவுதான். இந்த மேப்பில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே, அதற்கு இசையமைப்பாளர்கள்தான் கைகொடுக்க வேண்டும் என்றவர், கப்பல் விடாதே கட்டாந்தரையில ...என்ற பாடலை மேடையில் பாடி விழாவை கலகலப்பாக்கினார்.