ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஆதித்யா ராய் கபூரும், நடிகை சாரதா கபூரும் காதலிக்கிறார்கள் என்பது பாலிவுட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும், ஆனால் இதனை இருவரும் மறுத்து வருகிறன்றனர். இதனிடையே ஆதித்யாவும், ப்ரணீதியும் தாவத்-இ-இஷ்க் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதில் ஆதித்யா-ப்ரணீதி இருவரும் பங்கேற்றுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியுள்ளது. இது சாரதா கபூருக்கும் பிடிக்கவில்லையாம். மேலும் இதுதொடர்பாக ஆதித்யாவிடமும், சாரதா விசாரித்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே அதிருப்தி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் ஆதித்யாவும், ப்ரணீதியும் மும்பை முதல் சண்டிகர் வரை உள்ள ரோட்டோர உணவங்களுக்கு சென்று தாவத்-இ-இஷ்க் படத்தை புரொமோட் செய்ய உள்ளனர். செப்., 19ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.