'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
உத்தமவில்லன் கமல், தற்போது பாபநாசம் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் இப்படத்தில் வேஷ்டி சட்டை அணிந்து படம் முழுக்க நடிக்கும் கமல், அதே கெட்டப்பில் தான் செல்லும் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிகவாதிகள், சமூக சேவகர்கள் என பல பெரிய மனிதர்களையும் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், நாங்குநேரில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த பகுதியைச்சேர்ந்த வைணவ மடாதிபதி ஜீயரை சந்தித்த கமல், அவரைத் தொடர்ந்து இலக்கியவாதி தொ.பரமசிவன் என்பவரை சந்தித்தவர், சமீபத்தில் தென்காசியில் படப்பிடிப்பு நடந்தபோது அந்த பகுதியில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியிருந்து படித்து வரும் ஆயக்குடி அமர்சேவா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமூக சேவர் ராமகிருஷ்ணன் என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பிறகு படப்பிடிப்புக்காக கேரளா செல்லவிருக்கும் கமல், அங்குள்ள சில பெரிய மனிதர்களையும் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், தேவர்மகன், விருமாண்டி படங்களைப்போன்று இந்த பாபநாசம் படத்திலும் வேஷ்டி சட்டை அணிந்து நடிக்கும் கமல், அதே கெட்டப்பில் முக்கிய நபர்களை சந்திக்கும்போதும் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.