பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வியட்நாயம் வீடு சுந்தரம், தங்க பதக்கம், தில்லானா மோகனாம்பாள், ரத்த கண்ணீர் போன்றவை நாடகங்களாக நடத்தப்பட்டு சினிமாவானது. சினிமாவான பிறகும் மீண்டும் நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு ஒய்.ஜி.மகேந்திரன், வியட்நாம் வீடு சுந்தரத்தை மீண்டும் நாடகமாக நடத்தி வந்தார். இப்போது அவரும் சிவாஜியும் நடித்து வெற்றி பெற்ற பரீட்சைக்கு நேரமாச்சு என்ற படத்தை நாடகமாக இயக்கி நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: 1978ம் ஆண்டு என் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தை எழுதி இயக்கினார். அதில் நான் மகனாக நடித்தேன். அதன் பிறகு சிவாஜி தந்தையாகவும், நான் மகனாகவும் நடித்து சினிமாவாக வந்தது. இப்போது அந்த நாடகத்தை இந்த காலத்துக்கேற்ப சில மாறுதல்களுடன் நாடகமாக நடத்த இருக்கிறேன்.
வருகிற 14ந் தேதி முதல் 18ந் தேதி வரை வாணி மகாலிலும், 19ந் தேதி முதல் 21ந் தேதி வரை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பிலும் நடக்கிறது. ஹாலிவுட், பாலிவுட்டில சினிமா நடிகர்கள் நாடகத்திலும் நடிப்பார்கள். அது அவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள உதவும். தமிழ்நாட்டிலும் ஹீரோக்கள் நாடகத்தில் நடிக்க வந்தால் அவர்கள் திறமையும் வளரும், நாடகமும் வளரும். பல மாதங்களுக்கு முன்பு ரஜினியை சந்தித்தபோது நாடகத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறினார். இப்போது அவருக்காக ஒரு நாடக கதை தயார் செய்திருக்கிறேன். லிங்கா படப்பிடிப்பு முடிந்ததும் அதை அவருக்கு சொல்வேன். அவருக்கு பிடித்திருந்தால் நடிப்பார் என்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.