டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்டாண்ட் அப் காமெடியனும் நடிகருமான வீர் தாஸ், அவுரங்காபாத் மற்றும் மும்பையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்திய வரலாற்றை நகைச்சுவையுடன் கலந்து இந்த நிகழ்ச்சியில் அவர் வழங்கி வருகிறார்.
சரளமாக பேசுவதுடன், நொடிப் பொழுதில் நகைச்சுவை கூறி அனைவரையும் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவரான வீர் தாஸ், அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசுகையில், ஒரு காமெடியன் உண்மையான நகைச்சுவையுடன் புதுமைகளை புகுத்தியே எப்போதும் நடிக்க வேண்டும் என கூறினார்.
ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய வீர் தாஸ், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முன் நேரடியாக நடித்தது தான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என தெரிவித்தார்.