ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை த்ரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான 'பவர்' முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள் இந்தப் படத்தின் வசூல் 30 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
சமீப காலத்தில் கன்னடப் படங்களின் வெற்றியும் பல கோடிகளில் புரள ஆரம்பித்து விட்டது. 'நான் ஈ' சுதீப், சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடித்த 'மானக்யா' என்ற கன்னடப் படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். அந்தப் படத்தின் வசூலை 'பவர்' படம் ஏற்கெனவே முறியடித்து விட்டதாகவும், மொத்தமாக இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைத் தொட்டு விடும் என்கிறார்கள்.
கன்னடத் திரையுலகம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது மற்ற திரையுலகத்தினரைப் போல் பல கோடி ரூபாய் வசூலை அள்ள ஆரம்பித்திருப்பதை நல்லதொரு சாதனையாக கன்னடத் திரையுலகினர் நினைக்கிறார்களாம். அதிலும் தமிழ் நடிகையான த்ரிஷா ஏற்கெனவே தெலுங்கில் 'வர்ஷம்' படம் மூலம் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தினார். அதே போல் கன்னடத்திலும் அவர் நடித்த, அதுவும் அறிமுகமான படம் இந்த அளவு வசூல் செய்திருப்பதை த்ரிஷாவின் ராசி என்றே அவருக்கு நெருங்கியவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.