இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும் கொண்டதாகும் இந்த விருது. பரிசுத் தொகை குறைவாக இருந்தாலும் இந்த விருதை கேரள ரத்னா விருதாக கருதுவார்கள் மலையாளிகள்.
திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் நேற்று (செப் 11) நடந்த எளிய விழாவில் அவருக்கு இந்த விருதை கேரள முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார். விழாவில் எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி.ஜோசப், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில பேசிய ஜே.ஜே.யேசுதாஸ் " நான் எத்தனையோ விருதுகளை பெற்றிருந்தாலும் நான் பிறந்த மண்ணில் என் மக்கள் சார்பாக கொடுக்கப்பட்ட இந்த விருதை பெரிதும் மதிக்கிறேன். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற கேரளாவில் உள்ள எல்லா கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.