பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவை வருகிற 15-ந்தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். அதனால் விழாவில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள முன்னணி சினிமா கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரை கர்நாடகத்தில் நடைபெறும் லிங்கா படப்பிடிப்புக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்திருக்கிறார், ஷங்கர். அதனால அன்றைய தினம் லிங்கா படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு விழாவில் கலந்து கொள்வதாக கூறியுள்ளாராம் ரஜினி. அதேபோல் கமலையும் பாபநாசம் படப்பிடிப்புக்கு சென்று அழைத்துள்ளாராம்.
மேலும், மலையாளம், இந்தி சினிமாவைச்சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களும் அழைப்பு விடுத்ததை அடுத்து விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்களாம். ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை அழைத்தபோது, தான் நடிக்கும் படத்தின் இறுதிகட்ட பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டாராம்.