தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவை வருகிற 15-ந்தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். அதனால் விழாவில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள முன்னணி சினிமா கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரை கர்நாடகத்தில் நடைபெறும் லிங்கா படப்பிடிப்புக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்திருக்கிறார், ஷங்கர். அதனால அன்றைய தினம் லிங்கா படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு விழாவில் கலந்து கொள்வதாக கூறியுள்ளாராம் ரஜினி. அதேபோல் கமலையும் பாபநாசம் படப்பிடிப்புக்கு சென்று அழைத்துள்ளாராம்.
மேலும், மலையாளம், இந்தி சினிமாவைச்சேர்ந்த பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களும் அழைப்பு விடுத்ததை அடுத்து விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்களாம். ஆனால், இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை அழைத்தபோது, தான் நடிக்கும் படத்தின் இறுதிகட்ட பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தன்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டாராம்.