பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
ஒரு காலத்தில் சிம்பு, பிரபுதேவாவின் பேவரிட் ஹீரோயினியாக இருந்தவர் நயன்தாரா. ஆனால் இப்போதோ கீழ்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைத்து ஹீரோக்களும் நயன்தாராவின் ரசிகர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த சிம்புகூட மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர், அவருடன் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா தியேட்டர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து, தனிஒருவன் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. எப்போதோ நிறைவேற வேண்டிய அது இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று உற்சாகம் பொங்க சொல்கிறார்.
அதற்கடுத்தபடியாக உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திலேயே நயன்தாராவிடம்தான் கால்சீட் கேட்டேன் அப்போது அவர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சொன்னதால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினேன் என்கிறார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாரா உறவில் விரிசல் விழுந்ததால், இது கதிர்வேலன் காதல் படத்துக்கு நயன்தாராவை புக் பண்ணி டூயட் பாடியவர், இப்போது நண்பேன்டா படத்திற்கும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்து நடித்துக்கொண்டு வருகிறார். நயன்தாராவுடன் மீண்டும் நடிக்கும் ஆசையில்தான் முதலில் அப்படத்துக்கு புக் பண்ணியிருநத காஜல் அகர்வாலையே கழட்டி விட்டார் உதயநிதி.
அதேபோல், இப்போதைய சிவகார்த்திகேயன், விஜயசேதுபதியில் இருந்து அனைவருமே நயன்தாராவுடன் நடிப்பதில் அளவற்ற ஆசையில்தான் இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு சினிமாவில் தான் நடிக்க ஓராண்டு ரெட் கார்டு விழுந்து விட்டதை நினைத்து பீல் பண்ணிக்கொண்டிருந்த நயன்தாரா, தமிழ் சினிமா ஹீரோக்களிடம் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த வரவேற்பைக்கண்டு சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்.