பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு காலத்தில் வடிவேலுவின் நண்பராகவும் பங்காளியாகவும் இருந்தவர் சிங்கமுத்து. சிங்கமுத்து எனக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்துவிட்டார் என்று வடிவேலு குற்றம் சாட்டினார். வடிவேலு தி.மு.க பக்கம் போக சிங்கமுத்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆனார். இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் சிங்கமுத்து, வடிவேலு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பங்காளிக்கு (வடிவேலு) கையில படமே இல்லை. நான் நடிச்ச 11 படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு. 25 படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்பவும் நான் பிசியான காமெடி நடிகன் தான்.
வடிவேலு காமெடியில பெருசா சாதிச்சிட்டதா சொல்றாங்க. அவர் ஒண்ணும் தனியா சாதிக்கல. நாங்க பத்து பேர் சேர்ந்து யோசித்து செய்தோம். கதைக்கு தக்கபடி யாருக்கு என்ன கேரக்டர்? யார் எப்படி நடிக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம். அது ஹிட்டாச்சு. இப்போது வடிவேலுவை தனியாக காமெடி பண்ணச் சொல்லுங்க பார்ப்போம். பார்க்க ஆள் இருக்காது.
என்னையும் சில பேரு ஹீரோவா நடிக்க கூப்பிட்டாங்க. என்னோட உயரம் எனக்குத் தெரியும். ஹீரோன்னா பைட் பண்ணனும், டான்ஸ் ஆடனும், அதெல்லாம் இந்த வயசுல செய்ய முடியுமா. தேவையில்லாம ரிஸ்க் எடுத்து எதுக்கு சிலபேர் மாதிரி இருக்கிறதையும் கெடுத்துக்கணும், என்கிறார் சிங்கமுத்து.