தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதுரி தீட்சித் நடித்துள்ள ஆஜ் நஸ்லி படமும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இது, ரசிகர்களிடையே மாதரி தீட்சித் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் குறையவில்லை என்பதையே காட்டி உள்ளது.
மீண்டும் படத்தில் நடிக்க வந்திருந்தாலும், மாஜி நடிகை மதுபாலா தனது 500 பக்க சுயசரிதையை எழுதி முடித்திருப்பதை பார்த்து மாதுரி தீட்சித்திற்கும் சுயசரிதை எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதனை தானே வெளியிடவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இந்த புத்தகத்தில், நடிகையான பிறகு தன்னை இயக்கிய டைரக்டர்கள் பற்றிய அவர் கூற உள்ளாராம்.
பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் மாதுரி தீட்சித்தின் வீட்டிற்கு சென்று அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற சில தினங்களிலேயே மாதுரி தீட்சித் சுயசரிதை எழுத போகிறார் என்ற செய்திவெளியீட்டாளர்கள் வட்டாரத்தில் கசிந்து வருகிறது. சுயசரிதை எழுத வேண்டும் என்ற தனத ஆசை பற்றி மாதுரி தீட்சித், மன்மோகனிடம் ஆலோசனை நடத்தினாராம்.
இந்த சந்திப்பின் போது உடனிருந்த மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங், மாதுரி பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தை துவக்கி, அதன் மூலம் இந்த புத்தகத்தை வெளியிட உள்ளதாக கூறி உள்ளாராம். பல வெளியீட்டாளர்களும் மாதுரி தீட்சித்தை அனுகி அவரது புத்தகத்தை வெளியிட முன் வந்தாலும், தனது புத்தகத்தை ஒரே பதிப்பாக வெளியிட போவதாக மாதுரி தீட்சித் கூறி உள்ளார்.