இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டைரக்டர் விஷால் பாண்டியா எடுக்க உள்ள ஹேட் ஸ்டோரி படத்தின் 3ம் பாகம் தான் பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் நவம்பர் மாதம் துவங்க உள்ளது.
2012ம் ஆண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் சூஷந்த் சிங், சுர்வீன் சாவ்லா, ஜெய் பனுஷாலி ஆகியோர் நடிப்பில் வெளியான ஹேட் ஸ்டோரி 2, மெகா ஹிட்டானதுடன் வசூலையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தின் தொடர்ச்சியை ஹேட் ஸ்டோரி 3 என்ற பெயரில் டைரக்டர் விஷால் தற்போது எடுக்க உள்ளார். இது முந்தைய இரண்டு பாகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை எனக்கூறும் விஷால், இதில் அனைவரும் ரசிக்கும்படியான அம்சங்களையும் இணைக்க உள்ளாராம்.
ஹேட் ஸ்டோரி 2 படத்தில் முதல் முறையாக மெகாபோன் கையாளப்பட்டது. அதே போன்று இதில் பல புதுமைகள் செய்யப்பட உள்ளதாக கூறும் விஷால், இந்த படத்தை வெறும் எடுக்க வேண்டும் என்ற கடமைக்காக எடுக்கவில்லை. முந்தைய இரண்டு பாகங்களை விட அதிக சவால் நிறைந்ததாக இந்த படத்தை இயக்க உள்ளேன். இதற்காக அற்புதமான கதையை தயார் செய்துள்ளேன். ஆனால் தற்போது அது பற்றி கூற முடியாது. ஹேட் ஸ்டோரி 3ன் படப்பிடிப்புக்களை நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளேன். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் பட்ஜெட் பற்றி ஏதும் கூறாத விஷால் பாண்டியா, படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ளார். அடுத்த 2 வாரங்களில் நடிகர், நடிகைகள் குறித்த இறுதி பட்டியலை வெளியிட உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.