மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பிரசாந்த்-ஷாலினி நடித்த படம் பிரியாத வரம் வேண்டும். இந்த படத்தை மலையாள இயக்குனர் கமல் இயக்கியிருந்தார். இப்போது கமலின் மகன் ஜென்யூல் முகம்மது என்பவரும் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். அவர் இயக்கும் முதல் படமான 100 டேய்ஸ் ஆப் லவ் என்ற படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மான் நடிக்கிறார்.
இந்த படத்தில் முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சி வரை நடித்திருக்கும் துல்கர்சல்மானின் கதாபாத்திரத்திற்கு பெயரே கிடையாதாம். அந்த அளவுக்கு அவரை யாரும் பெயர் சொல்லி அழைக்காமல், இவரும் குறிப்பிடாத வகையில் ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறாராம் ஜென்யூஸ் முகம்மது. இது அவருக்கு தானாக உதித்த யோசனை இல்லையாம்.
ஏற்கனவே தெலுங்கில் மகேஷ்பாபு நடித்திருந்த அர்ஜூன் என்றொரு படத்தில், யாரும் அவரது பெயரை சொல்லி அழைக்க மாட்டார்கள். அவரும் யாரிடமும் தனது பெயரை சொல்ல மாட்டார். இருப்பினும் அந்த கேரக்டருக்கு ஒரு பெயர் இருந்தது. அதை கடைசியில் என்ட் கார்டு போடுவதற்கு சற்று முன்புதான், என் பெயர் அர்ஜூன் என்று சொல்வார் மகேஷ்பாபு.
அதை தனது முன்மாதிரியாக வைத்துதான் இந்த படத்திற்கு ஸ்கிரிப்ட் பண்ணினாராம் ஜென்யூஸ். ஆனால் மகேஷ்பாபு படத்தில் கடைசி காட்சியில் அவர் தனது பெயர் சொன்னபோதும். இவர் படத்தில் துல்கர்சல்மானின் பெயர் என்ன என்பது கடைசி வரை தெரியவே தெரியாதாம்.