ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆடுகளம்' படம் சூப்பர் ஹிட்டாக ஓடிய பிறகும் அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்சிக்கு தமிழில் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. 'ஆடுகளம்' திரைப்படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் டாப்சி நடித்த படங்கள் இரண்டே இரண்டுதான். ஜீவா ஜோடியாக 'வந்தான் வென்றான்' படத்தில் நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அடுத்து கடந்த வருடம் வெளியான 'ஆரம்பம்' படத்தில் ஆர்யா ஜோடியாக இரண்டாம் கதாநாயகியாக நடித்தார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் 'முனி 3 - கங்கா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் 'வை ராஜா வை' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் அவர் ஹிந்திப் படங்களில் நடிக்கத்தான் ஆர்வம் காட்டுகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
தன்னைப் பற்றி தமிழ் மீடியாக்கள் எப்போதுமே தாறுமாறாக செய்திகள் வெளியிடுகிறார்கள் என சமீபத்தில் கோபப்பட்டிருக்கிறார். 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமானதிலிருந்தே என்னுடைய திருமணத்தைப் பற்றியே எழுதி வருகிறார்கள். எனக்கே என்னுடைய திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியாத போது, எனக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே மீடியாக்கள் வேகம் காட்டுகின்றன என்றும் கூறியிருக்கிறார். அப்படி ஒரு வதந்தியைப் பற்றி எழுதுவதில் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது, அதனால் என்னுடைய வாய்ப்புகள் ஒன்றும் பாதிக்கப்பட்டுவிடாது என்றும் சொல்கிறாராம்.
அடிக்கடி இந்தப் பக்கம் தலை காட்டறவங்களைப் பத்தியே எழுத நிறைய இருக்கும் போது, தமிழ் சினிமா பக்கமே வராத டாப்சியைப் பத்தி யார் அவ்வளவு அக்கறையா எழுதப் போறாங்க...!