தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படம் வெளியாகும் அன்றே அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவது சில வருடங்களுக்கு முன்பு வரை கோடம்பாக்கத்தில் ஒரு சடங்குபோல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, தயாரிப்பு நிறுவனங்கள்தான் இந்த உத்தியை பின் பற்றி வந்தன. ஒரு படம் வெளியாகும் அன்று அடுத்தப் படத்திற்கு பூஜை போடுவார்கள். இதன் மூலம், விநியோகஸ்தர்களின் நம்பிக்கையைப் பெற்று சிக்கலில்லாமல் படத்தை வெளியிடுவார்கள். இப்படி செய்வது கண்துடைப்பு என்பது காலப்போக்கில் தெரிய வந்ததும்...பின்னர் இந்த வழக்கம் நின்று போனது. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படியொரு புதுப்பட அறிவிப்பை காண முடிந்தது.
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் கடந்த வாரம் அமர காவியம் படம் வெளியானது. இப்படத்தை தனது தி ஷோ பீப்பிள் பட நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார் ஆர்யா.
அமர காவியம் வெளியான அதே நாளில், சத்யா நடிக்கும் சென்னை சிங்கப்பூர் என்ற படம் ஆரம்பமானதாக விளம்பரங்கள் வெளியானது. மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி சிங்கப்பூர் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, அப்பாஸ் அக்பர் இயக்குகிறார். அமர காவியம் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் ஜிப்ரான். பிரவீன்.கே.எல் எடிட்டிங் செய்ய, ஒளிப்பதிவை முகேஷ் கவனிக்கிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாகவில்லை.