'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக சமீபத்தில் வேலையில் சேர்ந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தயாரிப்பு மற்றும் பட விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஈராஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், சௌந்தர்யா ரஜினிகாந்த் வேலைக்கு சேர்ந்த பிறகு தன் வியாபார எல்லையை விரிவுபடுத்தி இருக்கிறது. அதாவது ஆடியோ ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் ஆகிய தளங்களிலும் தன் வியாபாரத்தை விஸ்தரித்து உள்ளது.
முதல்கட்டமாக, விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் கத்தி படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறது ஈராஸ் மியூசிக் நிறுவனம். ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்ட சௌந்தர்யா ரஜினியின் முயற்சியால்தான் இந்த வியாபாரம் நடந்துள்ளது. ஈராஸ் மியூசிக் நிறுவனம் வாங்கியிருக்கும் முதல் தமிழ்ப் படம் கத்தி. எனவே இந்தப் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறதாம் ஈராஸ் நிறுவனம்.
கத்தி படம் தொடர்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவிவருவதால் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாமல் இருந்துவிடலாமா என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆலோசித்திருக்கின்றனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், கத்தி படத்தின் தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு, ஏற்கெனவே திட்டமிட்ட அதே செப்டம்பர் 18 ல் கத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியே தீர வேண்டும் என்று வலியுறுத்தினாராம். அதுமட்டுமல்ல, தன் அப்பா ரஜினி மூலமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தாராம். அதன் பிறகே கத்தி இசைவெளியீட்டுவிழா வேலைகள் வேகம் பிடித்திருக்கின்றன.