ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்காவை அண்மைக்காலமாக அவ்வளவாக காணமுடியவில்லை. தற்போது தமிழில் அனுஷ்கா நடிப்பது இரண்டே படங்கள்தான். ஒன்று...ரஜினியுடன் லிங்கா, மற்றொன்று..கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம். தமிழ்ப்படங்களில் நடிப்பதை அனுஷ்கா வெகுவாக குறைத்துவிட்டது ஏன்? அவர் நடிக்கும் ருத்ரமாதேவி, பாகுபலி ஆகிய இந்த இரண்டு தெலுங்குப்படங்கள்தான் காரணம்...! இவற்றில் பாகுபலி எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் படம்.
ருத்ரம்மாதேவியை இயக்கி வருபவர் குணசேகர். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருந்ததி படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அனுஷ்காவுக்கும் மிகப்பெரிய பெயரை தேடிக்கொடுத்தது. எனவே அதேபோன்று முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ருத்ரமாதேவி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனுஷ்கா. இப்படத்தில் காகத்தியா நாட்டின் ராணி ருத்ரம்மா தேவியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்கு அவசியம் என்பதால் வாள் பயிற்சி, குதிரையேற்றம் என பலவற்றையும் கற்றுக்கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார் அனுஷ்கா.
ருத்ரமாதேவி படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது. கடந்த 19 மாதங்களாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. கடைசிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது ருத்ரமாதேவி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையோடு உருவாகி வருகிறது - ருத்ரமாதேவி.