600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முருகாதஸ், தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி போன்ற படங்களை இயக்கியவர், இந்தியிலும் வெற்றி இயக்குநராக வலம் வந்தார். தற்போது மீண்டும் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடந்த கத்தி படப்பிடிப்பின்போது முருகதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு, ஸ்கேன் எடுக்கப்பட்டது, தொடர் ஷூட்டிங் காரணமாகவே அவர் மயங்கி விழுந்ததாகவும், தற்போது சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.